ஜால்ராக்களை நம்பியும், அரசாங்க கஜானாவை நம்பியும் ஆட்சி நடத்தியவர்களுக்கு மத்தியில், மக்களின் அன்பு ஒன்றையே அடித்தளமாக வைத்து ஆட்சி நடத்தும் ஒரு வரை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
“ம் எங்கே பார்க்கறது? இருக்கும் ஆளுங்க எல்லாரும் என் குடும்பம், என் மக்களென்று இருக்காங்களே! இதுல நாங்க எங்கே போய் நீங்க சொல்ற மாதிரியானவரை தேடுறதுன்னு" அலுத்துக்தறிங்களா?
இருங்க இருங்க... ரொம்ப நொந்துபோகாதீங்க. உங்களுக்கு உற்சாகமான செய்தியை ஒன்று சொல்லப்போறோம். உண்மையிலேயே அப்பழுக்கில்லாத மனிதர், காந்தி கண்ட கனவுகளை நினைவாக்கிக் கொண்டிருப்பவர், கறை படியாத உள்ளமும், கைகளையும் கொண்ட மனிதர் ஒருத்தர் இருக்கிறார். அவர்தான் புதுவை முதல்வர் ரங்கசாமி புதுவையில் இவர் ஏற்கெனவே காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இரண்டுமுறை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் ஒருவர் முதலில் நுழையும் கட்சி ஒன்றாய் இருக்கும், பின்பு மரத்துக்கு மரம் தாவுமே அதுபோல தாவி பயணப்படும் கட்சி பலவாய் இருக்கும். ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் தான் கொண்ட கொள்கையினால் ஆரம்பம் முதலே ஒரே கட்சியில் இருந்து, கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் கட்டுப்பட்டு கடும் பணியாற்றி. சிறந்த மனிதரென எல்லோரிடத்திலும் பெயர் எடுத்தவர் புதுவை முதல்வர் ரங்கசாமி
காங்கிரசில் இருக்கும் கடும் புகைச்சல்களை வைத்து ஆளாளுக்கு ஒருபக்கம் எதிரும் புதிருமாய் நின்ற போது இவர் எப்போதுமே தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்து வந்தவர், அப்படிப்பட்ட இந்த மனிதரை, காங்கிரசில் இருந்த சில புல்லுறுவிகள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி பகைமையை மூட்டிவிட, பலகாலமாய் தான் கண்ணியமாய் இருந்துவந்த கங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் புதுவை முதல்வர் ரங்கசாமி.
மனமெங்கும் துயரம் நிறைந்திருந்த நிலையில் தன் கூடவே இருக்கும் உண்மையான தொண்டர்களை அழைத்துப் பேசினார். நம்மை உணர்ந்து கொள்ள மறுக்கும் எதிர்நபர்களுக்கும், யாரோ சிலரின் பேச்சை நம்பும் கட்சித்தலைமைக்கும் நாம் யார் என்று காட்டுவோம், என்று தொண்டர்களும் ஆதரவாளர்களும் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர். மிக நிதானமாக அவர்களின் கோரிக்கைகளையும், குமுறல்களையும் அலசி ஆராய்ந்து இறுதியாக ஒரு முடிவெடுத்தார். அந்த முடிவு தனியாக நாம் ஒருகட்சி ஆரம்பிப்பது. அப்படி ஆரம்பித்தால் தான் நாம் செய்ய நினைக்கும் மக்கள் தொண்டை தடையில்லாமல் செய்யமுடியும். மக்களின் எதிர்ப்பார்ப்பையும் சரியாக நிறைவேற்ற முடியும். மக்கள் தன்னிடமிருந்து எதிர்ப்பார்ப்பது அதுவாகத் தான் இருக்கும். இதுவில்லாமல் வேறு எதுசெய்தாலூம் அது தவறான, மோசமான விளைவுகளையே தரும் என்பதை பலரோடு கலந்தாலோசித்தபின் தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.
அப்படி செய்த பின் ஒரு நல்ல சுபதினத்தில், புதுவை மக்களின் விருப்பமாகவும் இருந்த நெடுநாளைய விருப்பத்தினை நிறைவு செய்யும் பொருட்டும், என்.ஆர் காங்கிரஸ் என்றப்பெயரில் புதிய கட்சியைத்தொடங்கினார். புதுவை மக்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி. ஆனால் இவரை எதிர்த்தவர்களுக்கோ எத்தனை நாளைக்கு இந்த ஆளின் ஆட்டமெல்லாம். எங்களுத்தெரியாதா? காங்கிரஸ் கட்சியிலிருந்து, விலகிப்போய் தனிக்கட்சி ஆரம்பித்த ஆளுங்களைப்பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். போனியாகலைன்னா திரும்பவும் இங்கத்தான் வந்தாகனும். உச்சக்கொட்டிக்கொண்டு காத்திருந்தனர்.
அப்போது தமிழகத்திலும், புதுவையிலும் தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலில் புதுவையில் அ.தி.மு.க கூட்டணியோடு, தேர்தலைச் சந்தித்து அமோகமாய் வெற்றிப்பெற்றார் என்.ஆர்,காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி. காத்திருந்த கரும் புள்ளிகளுக்கோ பெருத்த அதிர்ச்சி. பார்க்க பரமசாதுவாய் இருந்த ரங்கசாமி புதுவை முதல்வரா? நம்பமுடியாமல் அதிர்ச்சியாய் பார்த்தனர். அவர்களுக்கு தெரியாது உண்மைக்கு எப்போதும் அழிவில்லை என்பதை காந்திமகான் சொன்னதை அவர்கள் மறந்தேவிட்டார்கள்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அரசியலுக்கு வந்து ஆட்சிக்கு, ஆட்சி இடம்மாறி, ஏதேதோ கணக்குகள் போட்டு போட்டியிட்டு தோற்றுப்போகும் கட்சிகளுக்கு மத்தியில் சொந்த கட்சி ஆரம்பித்த இரண்டே மாதத்தில் முதல்வராய் ஆனவர் புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள். அப்படியென்றால் அவர் அரசியல், பொது வாழ்க்கையில் யாரை பெரிதாய் நினைக்கிறார் என்பது உங்களுக்கு சொல்லாமலே விலங்கிவிடும். இவரைப்பார்த்தாவது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருந்துவார்களா? திருத்தப்படுவார்களா?
தற்போது முதல்வராய் இருக்கும் புதுவையின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமியைப்பற்றி சொல்வதெல்லாம் ஆனந்த அதிர்ச்சியாகவே இருக்கிறது. குரலசைவற்கு கோடிபேர் காத்திருக்க இவர் நடந்து செல்லும் வழித்தடமோ பொதுமக்களோடு பொதுமக்களாக தேநீர் சாப்பிடிவதோ சாதாரண டீ கடையில் பயணப்படதுவதோ,சாதாரண டூவிலரில் பொதுமக்கள் தங்களுக்கிடையில் முதல்வர் ரங்கசாமியை திடிரென்று பார்க்கும்போது திக்கு முக்காடிப்போகிறார்கள்.
நம்மூரில் சிலர் பயணப்படும்போது ஏற்படும் அவஸ்தையை நினைத்துப்பார்க்கிறீர்களா? நன்றாக நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு என்ன விதிச்சிறுக்கோ? அவ்வளவுதான்.
தற்போது முதல்வராய் இருக்கும் புதுவையின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி செய்யும் செயல்கள் என்னவோ அனைத்தும் மின்னும் வைரங்கள். குடிமக்களுக்கு கூப்பிட்ட குரலுக்கு தலைசாய்ப்பவர். தன் அரசின் மூலம் மக்களுக்கு எந்தவிதத்தில் அதிகபட்சமாய் செய்யமுடியுமா அதற்குமேலும் செய்ய துடிப்பவர். இப்படிப்பட்ட நல்ல மாமனிதரை காங்கிரஸ் கட்சியினர் தன்னிடம் வைத்து காப்பாற்ற முன்வரவில்லை? இன்று அடடா ஆள விட்டோட்டிட்டோமே என்று புலம்பித்தள்ளுவதாக கேள்வி எப்பவும் ஒருவர் இருக்கும் போது தெரியாத அருமை, அவர் இல்லாமல் போகும் போதுதான் தெரிகிறது. இது எப்பவும் மனிதர்களின் பலவீனம்தான் காங்கிரஸ் தலைமையை குத்தம்சொல்லி என்னவாகப் போகிறது சொல்லுங்கள்? நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் எங்கள் முதல்வர் என்.ஆர்.காங்கிரஸ்தலைவர் ரங்கசாமி அய்யாதான் எப்பவும் புதுவையின் நிரந்தரமுதல்வர் இதை நாங்கள் இப்பவே எழுதிக் கொடுக்கிறோம் என்று நம்மை அசர வைத்தனர் புதுவை மக்கள்.
இதைப்படிக்கும் போது உங்களுக்கு ஒன்று தெரியும். பணத்தாலும் அடிதடியாலும் அரசியல் பண்ணுபவர்களுக்கு பார்ப்பதே பெரும் புண்ணியம் என்பது.
வெள்ளமென மக்கள் கூட்டம் தினம் தினம் தங்கள் குறைகளை நேரடியாகவும், விண்ணப்பங்கள் மூலமும் கூறி நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
- பயனாளிகளுக்கு மனைகளும் வீடுகளும் வழங்கப் படுகின்றன.
- கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மகளிர் மருத்துவமனை இரண்டு மாதங்களில் செயல்படுகிறது.
- மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ்., ஒதுக்கப்பட்டு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு முதல் செயல்படுகின்றன.
- இலவச அரிசி 35 கிலோ வழங்கப்படுகிறது.
- ஏ.எஃப்.டி மில்கள் இயங்குகின்றன. அவைகளுக்கு பலகோடி ரூபாய் மதிப்புள்ள புதிய இயந்திரங்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. ஏ.எஃப்.டி மற்றும் அரசு மில்களில் தரமான நீடித்து உழைக்ககூடிய பாலீஸ்டர் புடவைகள் பல வண்ணங்களிலும் தரமான கைலிகளும், பொது மக்களுக்கு வழங்க தயாராகுகின்றன.
- மாணவச் செல்வங்களுக்கு தரமான உணவு, ரொட்டி, பால், சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- தேர்ந்தெடுக்கப்படும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மின்னல் வேகத்தில் வேலைகள் நடக்கின்றன.
கடந்த ஆட்சியில் இவைகள் ஏன் நடக்கவில்லை???
யார் தடுத்தார்கள், ஐவரும் முதலமைச்சர் தான் என்றார்கள். ஆனால், ஐவரில் ஒருவர் கூட மக்கள் பணியாற்றுவதில் எங்கள் என்.ஆர்க்கு ஈடு இல்லையென என்பதை நிரூபித்துவிட்டார்கள். எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க ஒற்றுமையில்லை ஆளுக்கு ஒரு கோஷ்டியாக இருக்கிறார்கள். காமராஜர் பிறந்தநாள் விழா தெருச்சண்டையில் முடிந்தது. சேர்கள் பறந்தன. மத்திய அமைச்சர் படாத பாடுபட்டு சமாதானப் படுத்தினார். எங்கள் என்.ஆர். ஒற்றுமையுடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், என்.ஆர் காங்கிரஸ் கட்சியினருடன் ஒற்றுமையாக கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதிலிருந்து உண்மையான காங்கிரஸ் எது, கோஷ்டி பூசலில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ் எது என்று காங்கிரஸாரே பொது மக்களே சிந்திப்பீர். வாழ்க என்.ஆர் வளர்க அவர்தம் மக்கள் தொண்டு.
மக்கள் முதல்வர் என்.ரங்கசாமியின் ஒரு சாதனை சகாப்தம்
புதுக்கட்சி தொடங்கிய அடுத்த மூன்றே மாதங்களில் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றிய சரித்திரச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் புதுச்சேரியின் இன்றைய முதல்வர் என்.ஆர்..., என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் என்.ரங்கசாமி. புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இவருக்குக கிடைத்த இந்த அபார வெற்றிக்கு அடிப்படை அவரால் அடையாளப்படுத்தப்பட்ட அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் என்கிற இயக்கமல்ல, என்.ஆர்.என்கின்ற தனி மனிதருக்கு புதுச்சேரி மக்கள் தந்துள்ள ஏகோபித்த ஆதரவே. மொத்த முள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் போட்டியிட்டு அதில் 15 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் ரங்கசாமி தான் போட்டியிட்ட கதிர்காமம், இந்திராநகர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி முகம் கண்டது குறிப்பிடத்தக்கது.
இவரது கட்சி கையிழந்த ஏனாம் மற்றும் மாஹே ஆகிய இரண்டு தொகுதிகளும் அண்டை மாநிலங்களை சார்ந்து இருக்கிற காரணத்தால் அங்கு அரசியல் சூழ்நிலைக்கேற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன. இருப்பினும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி கண்டுள்ள என்.ஆர்.காங்கிரஸ் சுயேட்சை ஒருவரது ஆதரவுடன் அரசுக் கட்டிலில் அறியணையில் அமர்ந்துள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் மாநிலக்கட்சி ஒன்று முதன் முறையாக அரசாளும் பொறுப்பு ஏற்பது என்பதும் இப்போது நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளில் ஒன்று. பிரெஞ்ச் ஆதிகத்திலிருந்து விடுப்பட்ட புதுச்சேரியில் 1964-ல் முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மையாக காங்கிரசும், ஓரிரு சமயங்களில் அதிமுக மற்றும் திமுகவும் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்திருக்கின்றன.
ஆனால் புதுச்சேரிக்கென தனிக்கட்சி துவங்கிய யாரும் இதுவரை ஆட்சியைக் கைப்பற்றியதில்லை. 1980-ல் முதன் முதலில் அதிமுக சார்பில் புதுச்சேரி முதல்வராக இருந்த எஸ்.ராமசாமி தனிக்கட்சி தொடங்கினார். அந்த வருடம் நடைப்பெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. ஆனால் அக்கட்சியின் தலைவரான ராமசாமியால் கூட அத்தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனது. இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் கண்ணன் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார். 1996 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டார். இக்கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் திமுக-வின் ஜானகிராமன் தான் முதல்வர் ஆனார். இதே கண்ணன் மீண்டும் 2001-ல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பேரிலும், 2006-ல் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற பேரிலும் புதுச்சேரி மாநிலத்திற்கென பிராந்திய கட்சியைத் தொடங்கினார். இவர் திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணி வைத்தும் தேர்தல்களில் அவரது கட்சிக்கு புதுச்சேரி மக்கள் உரிய அஙகீகாரம் தர மறுத்துவிட்டனர். பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்த கண்ணன் கடைசியில் காங்கிரசிலேயே ஐக்கியமாகிவிட்டார்.
இத்தகைய தனிக்கட்சிகளின் தோல்வி வரலாறுகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தன் மாநில மக்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் பேரில் தனிக்கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். மக்கள் முதல்வர் ரங்கசாமி மாநிலத்தில் வலுவாக உள்ள காங்கிரஸ், திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய பலமான வாக்கு வங்கிகளைக் கொண்ட எதிர்கட்சினது கூட்டணியை தனிமனிதராக எதிர் கொண்டு முகவசிகரங்களை, பேச்சாள பெருமக்களை எல்லாம் நம்மால் தான் முதல்வராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்களை மட்டும் முன்நிறுத்தி இந்த அபார வெற்றியினைப் பெற்று இருப்பது பாராட்டுதலுக்கும், பிரமிப்பிற்கும், ஆச்சர்யத்திற்கும் உரியது. மாநில மக்களின் உணர்வுகளை, எண்ணங்கள் என்னவென்பதை ஆராயாமல் நாட்டின் தலை நகரிலிருந்து சொல் பேச்சு கேட்டு அரசியல் முடிவுகளை எடுக்கும் காங்கிரசின் அகில இந்தியத தலைமைக்கு புதுச்சேரி மக்கள் இம்முறை சரியான பாடம் புகட்டியுள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் மக்கள் மத்தியில் வளர்ச்சி பெரும் யாரையும் முண்ணிருத்துவது இல்லாத காரணத்தாளும் ஒரு சிலரின் பேச்சை கேட்பதாலும் சில மாநிலங்களில் தோல்விகண்டுள்ளது குறிப்பிடதக்கது. மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை இருட்டடிப்பு செய்வதன் மூலம் அவர்களை மக்களிடமிருந்து விலக்கிவிட முடியாது. என்பதற்கு வி.பி.சிங், சரத்பவார், மூப்பனார் என அநேக பிரதேசத் தலைவர்கள் அக்கட்சியின் அகில இந்திய தலைமைக்கு தங்கள் அரசியல் முடிவுகளால் பாடம் புகட்டியும் இன்னமும் அக்கட்சி தலைமை அதனை உணர்ந்து கொண்டதாகவே தெரியவில்லை. புதுச்சேரியில் அத்தகையப் பாடத்தை இப்போது மக்கள் முதல்வர் ரங்கசாமி புகட்டியுள்ளார். புதுச்சேரியில் நல்லாட்சி தந்து கொண்டிருந்த ரங்கசாமியை ஒரு திடீர்ப் பொழுதில் டெல்லிக்கு அழைத்தார்கள். முதல்வர் பதவியை ராஜினாமா செய் என்றார்கள். அதற்கான எந்தவொரு எந்தவொரு முகாந்திரமும் இல்லாத போதும் கட்சிக்கு கட்டுப்பட்டு ரங்கசாமி அதனை செய்தார். வெளியே வந்து நமது மாநில மக்களுக்கு நல்லது நடந்தால் போதும் என்று பதவி ஆசை இல்லாமல் புதுவை மாநிலத்தை பார்த்த ரங்கசாமி தொகுதி மக்களையும், தன்னுடைய ஆன்மீக பணி, விளையாட்டு பணியை தொடர்ந்தார். ரங்கசாமி்யின் நல்லாட்சி காலத்தில் மூன்று முறை சிறந்த மாநிலத்திற்கான விருதுகளை தொடர்ந்து தக்கவைத்து புதுச்சேரி்க்கு பெருமை சேர்த்தார். முதல்வர் மாற்றத்திற்கு பிறகு இடைப்பட்ட காலத்தில் இரண்டரை ஆண்டுகளில் இவ்வாட்சி மக்கள் மத்தியில் மக்கள் விரோத ஆட்சியா மாறியது. ஆனால் இதனை தலைமை கண்டுக் கொள்ளவில்லை. கட்சியில் இருந்து மேலும் மேலும் ஒதுக்கப்பட்டார். இதனைக்கண்டு வெகுண்ட புதுவை மக்கள் தனிக்கட்சி தொடங்குங்கள் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று தொடர்ந்து அழைத்தனர். தம் மக்களின் வேண்டுக்கோளை ஏற்று தேர்தலுக்கு இரண்டு, மூன்று மாதம் இருக்கின்ற நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். கட்சி தொடங்கப்பட்ட உடன் பிறகட்சிகளில் இருந்து என்.ஆர்.காங்கிரஸில் இணையத் தொடங்கினார்கள். அடுத்தக்கட்டமாக புதிய கட்சி என்.ஆர்.காங்கிரஸின் முதல் மாநாடு, இந்த மாநாடு புதுவை சரித்திரத்தை புரட்டிப்போட்டது என்றால் மிகையாகாது. இதற்கு காரணம் இதுவரை ஐந்து அல்லது பத்து நிமிடம் பேசிய மக்கள் முதல்வர் 3 மணி நேரத்திற்கு மேல் பல உண்மைகளை பேசினார். இதனைக் கண்ட சிலர் தோல்வி பயத்தில் நடுங்க ஆரம்பித்தனர். தேர்தல் வந்தது என்.ஆரையும், அவரின் வேட்பாளர்களையும் தோற்கடிக்க பலம் வாய்ந்த எதிர்கட்சிகள் தன்னுடைய கட்சித்தலைவர்களையும் குறிப்பாக சோனியா,ராகுல் என பெரும் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்து போன போதும் புதுவை மக்கள் காங்கிரஸின் மாயைக்கு முற்றுபுள்ளி வைத்தது. ஒன்று அல்லா இரண்டு தொகுதியில் நின்ற என்.ஆர்.அவர்களையும் 17-க்கு 15 என்ற இமாலய வெற்றியை என்.ஆர்.அவர்களுக்கு புதுவை மக்கள் காணிக்கையாக்கினார்கள்.மீண்டும் முதல்வர் ஆனார். டெல்லியிலிருந்து அழைப்பு வரும் போதெல்லாம் நான் பயந்தபடியே செல்வேன் என்று குற்ற மற்ற ஒரு மாநில முதல்வர் கூறுகிறார் என்றால் இத்தனை ஆண்டுகள், அகில இந்தியத் தலைமை அவரை எப்படியெல்லாம் பாடுபடுத்தியிருக்கும் என்பதனை நம்மால் ஊகிக்க முடிகிறது.
சுயமாக முடிவெடுத்துச் செயல்படக்கூடிய ஒரு முதல்வர் புதுச்சேரிக்கு முதல் முறையாக கிடைத்துள்ளது நமது பாக்கியமாகும். புதுச்சேரியில் தேர்தல் களம் கண்ட எதிர்கட்சி கூட்டணியினர் என்.ஆரை குறைத்து மதிப்பிட்டு இருந்தனர் என்பது அவர்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படையாக்த் தெரிந்தது. என்.ஆரை முதல்வராக தேர்ந்தெடுத்தால் அவரது தட்டாஞ்சாவடி தொகுதிக்கு மட்டும் தான் முதலாவராக இருப்பார் என்றெல்லாம் கொச்சை விமர்சனம் செய்தனர். அவர்களை சொல்லிக் குற்றமில்லை, இத்தனை ஆண்டாக அமைச்சராகவும், முதல்வராக இருந்த ஒருவர் மீது அவர்களால் ஊழல் புகார்களையோ, குற்றச்சாட்டுகளையோ கூற முடியாத போது பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள். இந்நிலையில் அடுத்த அம்பு வன்னியருக்கு மட்டும் பாடு படுகிறார். இதனால் காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட, தலித்தை முன்னிருத்தியது. இதையும் புதுவை மக்கள் ஏற்காமல் புதுவை மாநிலத்தில் உள்ள 5-தனித் தொகுதியில் 4-ல் என்.ஆர்.காங்கிரஸ்க்கும் ஒன்று இதன் கூட்டணி அதிமுகவும் வெற்றிப்பெற்றது குறிப்பிடதக்கது. அதாவது ரங்கசாமியின் மீதான மக்கள் செல்வாக்கிற்கு களங்கம் கற்பிக்க காங்கிரசார் எடுத்த முயற்சிகள் அனைத்து நிலைகளிலும் அவருக்கு சாதகமாக மாறியது. இதுநாள் வரை மக்கள் முதல்வர் என்ற பட்டத்துடன் உலா வந்தவர் இனி அப்பட்டத்திற்கு தான் மட்டுமே உரியவர் என்கின்ற பெருமையுடன் உலா வரலாம். புதுச்சேரி மக்கள் எப்போதும் உங்கள் பக்கம்.
ஞானசித்தர் அப்பா பைத்தியம் சுவாமிகள்
கனவில் தோன்றி காட்சி தருவார் மக்கள் நினைத்த காரியத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி தரும் அற்புதம்
பாலப்பழம் இருக்கும் இடத்துக்கு ஈக்கள் எப்படியாவது வந்து விடும். பூக்களின் ஊறுகின்ற நறுமணத் தேனை உறிஞ்சுவதற்கு வண்டுகள் தேடி வரும். சர்க்கரை எங்கு சேமிக்கப்பட்டிருக்கிறதோ, அந்த இடத்தை அறிந்து, எறும்புகள் சாரி சாரியாக வந்துவிடும்.
இதற்கு என்ன காரணம்?
ஈர்ப்பு எங்கு இருக்கிறதோ, அங்குதான் நாம் கவரப்படுகிறோம்.அன்பும் ஈர்ப்புதான்; ஆன்மீகமும் ஈர்ப்புதான். காதலும் ஈர்ப்புதான்; காமமும் ஈர்ப்புதான்.
ஆக, எதன்பால் ஒரு மனிதன் ஈர்க்கப்படுகிறான் என்பதை வைத்தே அவன் எதிர்காலம் அமைகிறது. அவனது வாழ்க்கை பிரகாசமான சூரியன் போல் விளங்குமா இல்லை பிறை நிலவு போல் தேய்ந்து விடுமா என்பதை இந்த ஈர்ப்பே தீர்மானிக்கிறது.
அன்பாலும் பண்பாலும் அதிகம் ஈர்க்கப்பட்டு வளர்ந்தால், ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொள்கிறான். அதையே தன் மூச்சாகக் கொண்டு வாழ்கிறான்.
இளமைக் காலத்தில் - எது நல்லது என்று இனம் காண முடியாமல் - தேவை இல்லாத ஆடம்பர விஷயங்களால் இன்றைய இளைஞர்கள் ஈர்க்கப்படுவது நிதர்சனம். அதர்மத்தின் பார்வையில் செல்ல நேர்வதால், சாஸ்திர தர்மங்களை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நல்லது எது என்று போதிப்பதற்கு அருளாளர்கள் இருந்தும், அவர்களது குரல் இளைஞர்களின் காதுகளில் ஏறுவதில்லை.
பாரத தேசத்தில் எண்ணற்ற மகான்கள் அவதாரம் செய்த்தற்குக் காரணம் உண்டு. ஏனென்றால், இது தர்ம பூமி; சாஸ்திர பூமி; ஆன்மீக பூமி.
மகான்கள் என்பவர்கள், இறைவனின் அபதாரங்களாகவும் தூதுவர்களாகவும் தோன்றினார்கள்.
இரண்யனின் மகனான பக்த பிரகலாதனே தனது அடுத்த பிறவியில் வியாசராஜராகவும், அதற்கடுத்த பிறவியில் ஸ்ரீராகவேந்திரராகவும் தோன்றினான் என்பது புராணம்.
ஆக, ஒரு மகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும் தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது.
அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க ஓர் அவதாரம்தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள்.
தவத்திரு.அப்பா பைத்தியம் சுவாமிகள் கருவூர் கோட்டை ஜமீன் பரம்பரையில் 1859-ம் ஆண்டு சித்திரை மாதம் 28-ஆம் நாள் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதாரம் செய்தார். இவர் தமது 16-ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பழனி மலையடைந்து அங்கு தவத்திரு அழுக்கு சுவாமிகளைக் குருவாகக் கொண்டு ஞானம் கைவரப் பெற்றார். தம் குருநாதரின் மூலம் பலவற்றை அறிந்து கொண்ட இவர் ஓதாதுணர்ந்தவர் ஆவார்.
எல்லோரையும் ஒன்றுபோல் பாவிப்பது, யார் எதை ஆத்மார்த்தமாக கேட்கின்றார்களோ அதை தருவது இவரது சிறப்பு குணமாகும். ஏழை எளிய மக்களின் பசியினைப் போக்க அன்னதானத்தை ஆரம்பித்தார். பழுதுபட்ட ஆலயங்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்தல், ஏழை எளிய மக்களுக்கு திருமணம் நடத்திவைத்தல், தன்னை நாடி வரும் அன்பர்களின் மனக்குறைகளை நீக்குதல், சுவாமிகளின் இடைவிடாத அருட்செயல்களோடும் சுவாமிகள் தன்னையே பைத்தியம் என்று சொல்லிக்கொள்வார்கள். இதனால் பக்தர்கள் அவரை அப்பா என்று அழைத்தார்கள் அன்றிலிருந்து அவருக்கு அப்பா பைத்தியம் சுவாமிகள் என்று பெயர் வந்தது.
தனக்கென்று மடம் வைத்துக் கொள்பவனும் காசினை கையில் தொடுபவனும் தனக்கென்று ஒரு சீடரை வைத்துக் கொண்டிருப்பவனும் நான். எனது என்று பேசுபவனும் சந்நியாசி அல்ல சம்சாரி என்று வாழ்ந்தார்.
சுவாமிகள் நிறைவாக தமது 141-ஆம் வயதில் சூரமங்கலத்தில் சற்குரு மாளிகை (தருகவிலாஸ்) எனுமிடத்தில் பிரமாதி ஆண்டு 11.02.2000 தை அன்று 28-ம் நாள் அசுவினி நட்சத்திரத்தில் ஜோதியில் கலந்தார்.
சுவாமிகள் சமாதி கோவில் சேலம் சூரமங்கலத்தில் விஷீ ஆண்டு ஐப்பசி திங்கள் 25-ஆம் நாள் 11.01.2001 அன்று தெய்வ தமிழ் முறைப்படி திருமுழுக்கு நீராட்டு விழா இனிதே நடைபெற்றது.
இன்றும் சுவாமிகள், பலர் கனவில் தோன்றி பல நற்செய்திகளையும் நல்ல பல அருளும் வழங்கி பலர் வாழ்வில் மறையாத தெய்வமாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
சுவாமிகளை நாமும் நினைப்போம்.
வாழ்வில் வளம் பல காண்போம்.
சித்தர்கள் வாழ்ந்த புதுவையில் நடமாடும் சி்த்தராக பிரகாசிக்கும் மக்கள் முதல்வர்
அதிகாலை நேரம்; சுப்ரபாத இசை; வேங்கட நாதனின் சன்னதி எப்போது திறக்கும்? என ஆயிரமாயிரம் கண்கள் பக்திப் பரவசத்துடன் ..... இது திருப்பதயில்.
அதிகாலை நேரம்; சலசலக்கும் மக்களின் பேச்சொலி; முதல்வர் ரங்கசாமின் வீட்டுக்கதவுகள் எப்போது திறக்கும் என ஆயிரமாயிரம் நெஞ்சங்கள் மகிழ்ச்சியின் ஏக்கத்துடன்.. இது புதுவையில்.
முதல்வர் கதவு திறக்கிறது, முதல்வர் வாசல் வந்தவுடன் எல்லோரையும் சிரித்த முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் அழகே தனி. வந்தவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்தும் வந்தவர்கள் குறைகளை கேட்டு உடனே ஆவண செய்யும் விதமும் அருமை என்றே சொல்லலாம்.
அவர் இளமை காலம் தொட்டே தேசப்பற்றும், காங்கிரஸ் பேரியக்கத்தின்பால் கொண்ட பக்தியும், கொள்கை பிடிப்பும், அவரை தன்னிகரற்ற புதுவை முதல்வராய் ஆக்கியுள்ளது என்பது மறுப்பதற்கன்று.
நாட்டு நலத்தையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவர் செய்யும் செயல்பாடுகள் மிகவும் போற்றதற்குரியது. புகழ்பாடும் புதுவை மண்ணில் வாழும் இளைய காமராசராம் எங்கள் முதல்வர். அவருக்கு இணை அவரே!
அவர் மக்களை மதிப்பதில் மனிதநேயம் கொண்டவர். அதன் பிரதிபலிப்பே புதுவை மக்கள் அவரைச் சட்ட பேரவைக்குத் தொடர்ந்து அமோக வெற்றியுடன் தேர்வு செய்து சரித்திர நாயகனாக இடம்பெறச் செய்தார்கள்.
புதுவையில் வாழும் நம் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பேருதவியும், நற்பயன்களையும் செய்து வருகிறார். தியாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் தியாகசீலர் அவர் ஒருவரே, மேலும், சரித்திர நாயகரான நம் முதல்வர் புதுவை மக்களுக்குச் செய்து வரும் தொண்டுகள் கணக்கிலடங்கா!
ஏழை எளிய மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் அளிக்கும் மாமனிதர். பள்ளி குழந்தைகள் பாலும் அருந்தி செழித்திட ஓங்கிய திட்டத்தை வகுத்த வள்ளலார். அவர் பேசும் பேச்சுகள் திகட்டாத தேனாய் இனிக்கும். அன்பொழுகும் வாக்கினில் என்றும் கனிவு உண்டு.
எங்கள் முதல்வர்
"காட்சிக்கு எளியன் கடுஞ்செல்லான் அல்லனேல்
மீகக்கூறும் மன்னன் நிலம்."
என்னும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எளியவர். இதனை, புதுச்சேரி மக்கள் நேரில் கண்டும், பேசியும், பழகியும் உணர்ந்துள்ளனர். மக்களோடு மக்களாகப் பழகி மக்களுக்காக ஆட்சி நடத்தும் மக்கள் தலைவர் என்பதை யாரும் மறுக்க இயலாது.
வாழ்க முதல்வர்! வளர்க அவரிபணி!
புதுச்சேரி என்றவுடன் நினைவுக்கு வருவது அரவிந்தர் ஆசிரமம், அழகிய கடற்கரை, மணக்குள விநாயகர் கோவில், ஆரோவில் இந்த வரிசையில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களையும் இணைத்துக் கொள்ளலாம். இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர், ஆனால் நீதிமன்றத்திற்கு சென்றதில்லை.
புதுவை மக்களால் ஏழை பங்காளன் என்றும், பெருந்தலைவர் காமராஜர் என்றும் போற்றப்படும் ரங்கசாமி தனது ஆட்சிக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்காக நிறைவேற்றிக்கொண்டிருக்கும் பல திட்டங்களை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.
பெருந்தலைவர் காமராஜரைப் போலவே ஏழை எளிய மக்களிடம் ஈடுபாடு கொண்ட ரங்கசாமி பொதுமக்கள் அவரது இல்லத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, எந்த நேரமும் சந்திக்கலாம். வாயிற் காவலர்களோ, உதவியாளர்களோ தடுப்பதில்லை. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை இவரிடத்தில் எளிதில் வைக்கலாம். இவை எல்லாம் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு ஆன்மீகவாதியாக சமூக சேவகியாக அவரோடு தொடர்பு கொண்டிருக்கும் என்போன்றவர்கள் பார்வையில் அவருடைய ஏற்றமிகு செய்கைகள் பாராட்டத்தகுந்ததாக அமைகிறது.
ஒருமுறை புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் ஒரு விழாவுக்காக சென்று இருந்த போது ஒரு வியத்தகு நிகழ்ச்சி நடந்தது. பொம்மைக் கண்காட்சியை திறந்து வைத்து வலம் வந்து கொண்டிருந்த அவர் முடித்தக்கொண்டு வெளியேறும் தருணத்தில் ஒரு தாய் ஒரு தந்தை தங்களது ஆறு வயது சிறுவனுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுவன் தன் தாயாரைப் பார்த்து அம்மா ரங்கசாமி ரங்கசாமி என்றான். எனக்கோ ஆச்சரியம் ஆறு வயது சிறுவனுக்குக் கூட இந்த மாநில முதல் அமைச்சரை அடையாளம் தெரிந்து இருக்கிறதே என்று வியப்பு அடைந்தேன்.
நான் அந்த பையன் அருகில் நின்று அவனை கவனித்தேன். அவனுக்கு ரங்கசாமியின் கை குலுக்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பதாக தெரிந்தது. தூரத்தில் வந்த ரங்கசாமி இதை கவனித்து விட்டார். அந்த பையன் அருகில் வந்து "என்ன கை குலுக்க வேண்டுமா?" என்று கேட்டு விட்டு அவன் கையைப் பிடித்து கை குலுக்கிவிட்டுச் சென்றார். ஆறு வயது பையன் நெஞ்சிலே இடம் பிடித்த ரங்கசாமி இந்த மாநிலத்தின் அத்தனை பேர் நெஞ்சிலும் இடம்பிடித்து இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.
கலியுகத்தில் வாழ்ந்து அற்புதம் நிகழ்த்திய அப்பா பைத்திய சுவாமிகள் ஆசியுடன் இப்போது புதுவையில் முதல்வர் ரங்கசாமி செயல்பாடு மகிழ்ச்சிக்குரியது.